Monday, November 30, 2009

இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு


அபி அப்பா பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சுவையான விடயம் என்னவென்றால் ஒரு பிளஸ்ஸும் ஒரு மைனஸும் மட்டுமே விழுந்திருந்தது. அந்த பிளஸ் நான் போட்டதே.. என் பதிவுகளுக்கு நானே பிளஸ் போடவில்லையென்றால் என் பதிவுகளை மெச்சிக் கொள்வது எவ்வாறு? அதே நேரம் அப்பதிவிற்கு விழுந்திருந்த மைனஸ் எப்படி விழுந்திருந்தது ? யார் போட்டது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இப்படியொரு "மில்லியன் டாலர்" நிகழ்ச்சி நடக்கப்போக இந்தச் சொற்றொடரும் வாழ்க்கையில் வியாதியாகத் தொடர்கின்றது. இந்தியில் நடக்கும் குரோர் பதியைப் போல. "ஸ்லாம் டாக் மில்லியனருக்கு" கருவைக் கொடுத்தது போல.

மைனஸ் புள்ளி அபியின் அப்பாவால் விழுந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாதாட இந்தப் பதிவுலகத்தில் அதிகம் பேர் முன்வரக்கூடும். நான் எப்போதும் இப்படியான சாத்தியங்களை கருத்திலேயே எடுப்பதில்லை. ஏனென்றால் என் மனதில் உள்ள கருத்துக் கந்தசாமி போன்ற பிம்பங்கள் உடைந்து போவதில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உப்புச் சப்பில்லாமல் உடைந்து போகும் சிறு பிள்ளைத்தனமான விவாதங்களிலும் அதிகம் நாட்டம் கிடையாது.

உண்மையில் இங்கு அபி அப்பாவிற்கு புள்ளி போட நினைப்பதை விட ஒரு புள்ளியில் உட்கார்ந்திருந்து சங்கடப்படுதலே அதிகம் சாத்தியமாகி இருக்கும். ஏனெனில் அவரின் இருப்பு பற்றி அவர் ஒரு இருண்ட குகையில் இருந்தே நீச்சலடிக்கும் குணம்சத்துடன் இருந்ததாக அவரின் அசைவுகள் நிரூபித்திருந்தது. இந்தப் பரந்த உலகில் அவரின் குணாம்சங்கள் கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் மொக்கையில் ஊறிய திருட்டுக் குணத்தின் அடியொற்றியதாகவே வெளிப்பட்டிருந்தது.

கட்சி அரசியல் பிச்சை அரசியல் என்பதைப் போதனயாகவும் வாழ்வாதாரமாகும் கொண்டிருந்த அவர் போலொத்தவர்கள் அவ்வாறு சிந்திப்பது அவர்களின் தவறல்ல. ஒரு புரட்சி வாதியாக அவரை நினைத்துப் பார்ப்பதே பெரும் முட்டாள்தனம். அப்படிப்பட்டவர் சைபர் கிரைம் , தீபா போன்ற பெண்களுக்கெதிரான உட்டாலக்கடி போன்ற வில்வித்தைகளைக் கட்டவிழ்த்து விட்டதையும் சென்ஷி போன்றவர்கள் உதிரம் கொதித்து துள்ளிக்குதித்ததையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள வேண்டியது தான்.

ஆனால் குசும்பன் போன்ற இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு வகையறாக்கள் அதற்கான தலையீடுகளில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது இன்னும் மனதைக் குடைகின்றது.

தன்னால் முடியாத விடயங்களில் தடக்கி விழும் இக்குணாம்சத்துடன் இயங்கும் இவர்கள் இவ்வகையாக ஒரு மைனஸ் போடுவது எதிர்பார்க்கக் கூடியதே.

இவர்கள் எதைப் புடுங்கி சாதிக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே விரைவில் தெளிவு படுத்துவார்கள். இவ்வகையான குசும்புகள் சாரு நிவேதிதாவின் இலக்கிய மேம்பாட்டுக்காவலர்களாகக் காட்டிக்கொண்டு சீரழிக்கும் போக்கிற்குச் சற்றும் குறைந்ததல்ல. அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான விவாதக் களமாகக் கூட "புளக்கியம்" இருப்பதை அனுமதிக்க மறுக்கின்றார்கள் என்பதே பெரும் துயரமாகும்..

Sunday, November 29, 2009

கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கும் அபி அப்பா


தி.மு.க வின் வலக்கை, இடக்கை, உலக்கை இவர் என்பது உலகப்பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. பதிவுலக மகளிரைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கருப்புக்கண்ணாடி கருணாநிதியின் கட்சிச் செல்வாக்கைக் காட்டி மிரட்டித்திரிந்த்வர் இவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சைபர் கிரைம் பிராஞ்ச் போன்ற சதுர் கச்சேரிகள் பல காட்டி பெரிய அளவில் "படங்காட்டியவர்" இவர் என்பது பதிவுலகம் அறிந்ததே.

எண்ணெய்க்குடா நாட்டில் பொட்டி தட்டும் இவர் தமிழ் இலக்கணவாதியின் பெயரையும் கொண்டவர். ஷென்ஷி போன்ற ஒரு சில எதிரிகளையும் குசும்பன் போன்ற ஒரு சில காமடியன்களையும் எப்போதும் அருகிருத்திக்கொண்டிருக்கும் இவர் எல்லோருக்கும் நல்லவரே.

இப்போது மாயாவரத்தில் டேரா அடித்திருக்கும் இவரும் தி. மு.க வில் எழுந்திருக்கும் புகைச்சலில் அகப்பட்டு கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

ஆளைப்பார்த்து வயதைக் கணிக்க முடியாத மார்க்கண்டேயத் தோற்றமும் டூ இன் வண் கண்ணாடியும் அணிந்திருக்கும் இவரும் இந்தச் சுழலில் அகப்பட்டிருப்பாரா? என்று உறுதிபடக் கூற முடியாதிருக்கின்றது. (வயது தெரியாததால் வந்த வினை.. குட்டி குட்டியாக இருக்கும் அவர் பிள்ளைகளும் இவரை அந்த அளவிற்கு சீனியராக்க முடியாது தடுக்கின்றனர்)

சரி இனி நியூஸ்: "தலைமுறை, தலைமுறையாக தி.மு.க.,வில் இருக்கிறோம். கட்சிக்காக பலமுறை ஜெயிலுக்கும் சென்றுள்ளோம். ஆனால், எங்களை யாரும் வந்து பார்க்காமல் அலட்சியப்படுத்துகின்றனர் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளவர்கள்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர் "சீனியர்' பிரமுகர்கள்.


இது குறித்து, மூத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:நான், 30 வருடங்களாக கட்சியில் உள்ளேன். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகள் பல வகித்தவன். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு 39 முறை ஜெயிலுக்கு சென்று வந்தேன். இப்போதும் முக்கிய பொறுப்பில் தான் உள்ளேன். ஆனால், தேர்தல் தேதி அறிவித்தும், இதுவரை யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. என்னைப் போன்ற சீனியர்களிடமும், ஆதரவு கேட்டு வரவில்லை.நாங்கள் கட்சிக்காக உழைத்து, கட்சி வளர்க்க பாடுபட்டோம். சாகும் வரை கட்சியில் தான் இருப்போம். புதிதாக பொறுப்பில் வந்தவர்கள் பற்றி தலைமைக்குத் இது தெரியுமா என்பது தெரியவில்லை. தொகுதியில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதுமே இதே நிலை தான். அமைச்சருக்கு இது தெரிந்தும், அவர்களுக்கு "சப்போர்ட்' செய்வதால் எங்களுக்கு தொடர்ந்து அவமானமே ஏற்படுகிறது.இவ்வாறு அந்த பிரமுகர் வருத்தத்துடன் கூறினார்.



அபி அப்பாவின் மனதைத் திருடிய "கள்ளி"


குறிப்பு:1. தறுதலை தலைவனைப் பின்பற்றும் எவருக்கும் வாய்ப்பது தான் இந்த இழி நிலை என்று நீங்கள் புலம்புவது சத்தியமாக எனக்குக் கேட்கவில்லை.

2. கலியாணச் சாப்பாட்டைக் காட்டி கடுப்பேற்றியதற்காக ஒரு "ப(லி)சி வாங்கல்

குமுதமும் ஒரு " ஜோக்கரும்"




குமுதம் ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதைப் படித்து இரசித்தவர்கள் அறிவார்கள். அவர்களின் இலக்கிய சேவையே பைசா சம்பாதிப்பதையே ஆணி வேராகக் கொண்டு இயங்குவதை அனைவரும் அறிவோம். பிரியாமணியின் பிராவின் பட்டையை போக்கஸ் பண்ணிப் போடுவதால் எகிறப்போகும் விற்பனையைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

வாசிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாகவே எப்போது இருக்க வேண்டும் என்று ஏதாவது நிபந்தனை இருக்கின்றதா? என்ன? அப்படியே ஒரு நிபந்தனை இருந்தால் வாசிப்பவர்கள் அரைவாசிப்பேர் காணாமல் போய் கடற்கரை ஓரத்தில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். இணையத்தில் ப்ளாக்குகளில் எல்லாம் எழுதிக் கொண்டிருப்போர் எல்லாம் என்ன? இலக்கியத்தைக் காக்க வென்று சபதம் போட்டு வந்தவர்களா என்ன?

குசும்பு ,மொக்கை,சக்கை என்று படு ஜோராக படங்காட்டிக் கொண்டிருப்பவர்களிடமெல்லாம் இலக்கியம் வீசை என்ன விலை என்று கேட்டுப் பாருங்கள். ரூபாய்க்கு மூன்று என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இவர்களெல்லாம் ஏதோ தங்களால் முடிந்த எலக்கிய சேவை செய்ய வந்தவர்கள் என்பதே பெரிய விசயம். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவும் அனுபவமும் கொடுக்கவென்றே முன்னோடியாக வெளிவரும் பத்திரிகைகளே குமுதமும் ஆனந்த விகடனும்.

இதை அறிந்தவர்களே அனுபவப்பட்டவர்களே தங்கள் பதிவுகள் குமுதம் ஆனந்த விகடனில் வந்து விட்டால் நாலு கட்டம் கலரில் கட்டி "நன்றி" அறிக்கை விடுகின்றார்கள். அவர்களின் பிறவிப்பயனே ஈடேறியதாகக் கொண்டாடுவது இதனால் தான். அவர்களின் இலக்கும் இலக்கிய சேவையும் இதக் குறித்தே இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் சந்தோஷத்தை தட்டிப் பறிக்க நாங்கள் யார்?



இந்தப் பத்திரிகைகளில் கூட வரமுடியாத எழுத்துக்களின் சொந்தக் காரன் சாரு நிவேதிதாவிற்கு "இந்தப் பழம் புளிக்கும்" நரியின் நிலை தான். யாரோ தன்னை "ஜோக்கர்" என்று எழுதி விட்டார்களாம். தமிழ் வாசிப்பாளர்களின் உலகம் அப்படித்தானே கட்டம் கட்டி வைத்திருக்கின்றது.

கேரளத்துப் பெண்களின் வனப்பு பாரதியாரைக் கூட சுண்டியிழுத்ததெனில் நாமெல்லோரும் எம்மாத்திரம். "சிந்து நதியினிசை நிலவினிலே... சேர நல் நாட்டிளம் பெண்களுடனே.." நாமுமென்ன அவருக்குக் குறைந்தவர்களா என்ன? நயனின் நயனத்தைத் தவிர எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேராகப் பிரித்து மேய்ந்து தானே நம் கனவுகளைக் கலர் புல் ஆக்குகின்றோம்.நமக்கே இப்படியென்றால் முற்றத்து மல்லிகையின் வாசனையை நாளும் சுவைக்கும் மலையாளிக்கு சாரு நிவேதிதாவின் மஞ்சள் கதைகளான அர்த்த ஜாமக்கதைகள் பிடித்துப் போனதில் என்ன தவறிருக்க முடியும்.

"வேலிக்கு ஓணான் சாட்சியாம்" தான் ஒரு மஞ்சள் பத்திரிகை எழுத்தாளன் என்பதற்கு அவர்கள் சாட்சி சொல்வார்களாம். அதைதானே நாங்களும் ஒத்துக் கொள்கின்றோம். கதை அப்படியிருக்க ஸ்டாக்ஹோம், சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு என்று பீலா விடுவதை ஜோக்காக எடுத்துக் கொண்டு ஜோக்கர் என்று கூறுவதில் தவறென்ன இருக்கின்றது.


ஆனந்தவிகடன், குமுதம் மட்டுமா ? தினமணி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களும் அதைத் தானே செய்கின்றன. சினிமா நடிகைகளின் படங்களைப் பார்த்து "வாணி" வடிக்கும் இளைஞர்களே கிழக்கிலிருந்து மேற்கு வரை நீண்டு இருக்கின்றார்கள். அப்படி இருப்பது ஒன்றும் தவறில்லையே. இயற்கையான விடயமும் அது தானே. மனிதன் ஒரு விலங்கு என்பதை நாம் அடிக்கடி மறந்து போவதன் வினை தான் இது.

இயற்கைக்குத் தேவை ..இனப்பெருக்கம். அது இல்லையென்றால் இயற்கையே அழிந்து விடும். தமிழர்கள் மிருகங்கள் போல் கொல்லப்படும் போது மிருகமாகவே இருந்து மிருகமாகவே சிந்திக்கத் தலைப்பட்டு அதனாலேயே "பலாத்காரத்தின் தோல்வி" பற்றி விஸ்தாரமாக "நொண்ணை"எழுதிய சாரு நிவேதிதா இப்போது எப்படி இயற்கையை மறுதலிக்கலாம்.

மனிதனின் இயற்கைக் குணம் சீண்டுவது,சினப்பது,முட்டுவது குட்டுவது. அதைத்தானே அவர்கள் செய்கின்றார்கள். இவர் கூறும் "இலக்கியப் பிம்பம்" இவர்களாகவே சட்டம் கட்டிக் கோடு போட்டு வீட்டில் மாட்டி வைத்திருக்கும் மாயமான் அன்றி வேறென்ன?

இறந்துபோன தன் மனிதர்கள் பற்றிய இரக்கத்தை வெளிப்படுத்தவே மற்றவர்கள்(புலிகள்) விட்ட பிழைகளை அளவு கோலாகக் கொண்டவர்கள், கொண்டாடியவர்கள் எப்படி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

இலக்கியப்பிரமாக்கள் தேவையே இல்லாத சாதாரண மனிதர்களையே கோரும் ஒரு சமுதாயத்தில் மனிதனாக இருக்க முடியுமா? என்று இவர்கள் யோசிக்கட்டும். அதன் பின்னால் ஸ்டாக்ஹோம் , சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு பற்றியெல்லாம் யோசிக்கலாம்.

Saturday, November 28, 2009

என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?


ஏதாவது செய்தாக வேண்டும். ஆர்ப்பரிக்கும் கடலலையைப் போல உள்ளம் குதித்துக் குதித்து அடங்க மறுக்கின்றது. கரை முழுதும் ஓடிச் செல்லும் அலை போல ஓடியோடி அடங்க மறுக்கின்றது மனம். காற்றைத் திருகி முறுக்கிக் கொலை செய்யவும் கைகள் பரபரக்கின்றது.
ஏதாவது செய்யவேண்டும். எப்படியாவது தன் எதிர்ப்பைக் காட்டும் குழந்தயைப் போலவாது வாயிலிருப்பதைத் துப்பியாவது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று இருக்கின்றது.

இறந்து போன மக்களைப் பற்றித் துயரப்படாத மனங்களை கல்லுக்கும் மலைக்கும் ஒப்பிட்டு விலகி விட்டேந்தியாகப் போக முடியாதிருக்கின்றது. பொறாமையோ இயலாமையோ என்ன இழவையோ சுமந்து கொண்டு வெறும் சோற்று மூட்டைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு கோடித் தமிழர்களை எந்த ஆறு பெருக்கெடுத்து அள்ளிப்போகும் என்று கோபம் குமைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு நாதாரி கூனும் வயதிலும் நடுங்கும் கரத்திலும் குழறும் வாயிலும் சொல்லும் வார்த்தைகள் உயிரைக் குடிப்பதை மறந்து என்ன வாழ்க்கை பற்றி நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். புலிகளின் கொட்டங்கள் எந்தக் குப்பைக்கூடையிலும் கொட்டுப்பட்டு போகட்டும். அவர்களின் பிழைகளைக் கூட அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து வியாக்கியானம் செய்து வைப்போம். அவர்களின் தோல்வியைக் கூட கைதட்டி பியர் குடித்து வரவேற்போம்.

அவர்களுடன் கூடவே செத்து மக்கிப்போன நம் மக்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. அவர்களின் சாவிற்கு எந்த உவமையையும் மோனையையும் சேர்த்து கவிதை புனைவது. வாழ ஆசைப்பட்டு அனாதைகளாக செல்லடியிலும் குண்டடியிலும் இரத்தச் சகதிகளாகச் சிதைந்து போன அந்த மக்களின் இறப்பைக் கூட இந்த புளுத்துப்போன வாயினாலும் இத்துப்போன வார்த்தைகளாலுமா நாம் விளங்கிக் கொ
ள்வது. தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாக ஒரு துளி கண்ணீர் விட யாரிடம் உத்தரவு கேட்டு இறைஞ்சி நிற்கின்றோம்.

மரணித்த மாவீரர்களின் கல்லறையில் ஒரு பூவை எடுத்தெறிய இந்த வஞ்சகப் புழுவின் வாய் ஜாலங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உடன் பிறப்புகளை எரித்துப்போடுவதால் என்ன குறைந்து விடும். உடன் பிறப்பு தமிழுக்காகவா? அல்லது தமிழை வைத்து விபச்சாரம் செய்யும் மு.க விற்காகவா?

புலிகளின் அழிவு பிரபாகரனின் பிழையினால் என்று கூற இந்த முட்டாள் கிழவனுக்கு யார் துணிவைத் தந்தது? தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொண்டது காக்கைவன்னியன் போல காட்டிக்கொடுக்கவா? இந்திப் பெண்ணை எதிர்த்து கரி பூசிய இவர்களா இன்று இத்தாலிப் பெண்ணின் முந்தானையில் முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொள்கையினால் உந்தப்பட்டுத்தானா? இன்று தமிழகம் மு.க வின் தலைமையில் புளகாங்கிதமடைந்து நடை போடுகின்றது. இதைப்பார்த்து பொதிகை மலையில் தமிழ் வளர்த்த அகத்தியன் எரிந்த எழுத்தாணி அரபிக்கடலில் புதைந்து தொலைந்து போகின்றதே.

கலைமாமணி விலைமாமணியாகி எத்தனையோ காலமாகி விட்டது. அதையே இந்தப் புல்லுருவி "அம்மா கொடுத்த முத்தம் போல் "இருக்கின்றது என்கின்றது. தன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்ட தமிழ்த் தாய் தன் முலையை அறுத்து எறிந்தாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். புறமுதுகிட்டதுடன் காட்டிக்கொடுத்த இந்த கருப்புக்கண்ணாடியின் தாய் எத்தனை முறை தன் முலை அறுத்து எறிவாள்.

"தம்பி தமிழ்ச் செல்வா" என்று தகிடு தத்தம் போட்ட இந்த கிழட்டாடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்த வேற்றுமை கூட அறியாத தமிழறிஞர்களா செம்மோழியில் மாநாடு நடத்திக் கிழித்து விடப்போகின்றார்கள்.

என்ன? துக்கம் என் தொண்டையை அடைக்கின்றது. இதையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரு குரல் கூட இல்லாத செத்த மக்கள் வாழும் நாடா ? தமிழகம்.இறந்து போன மாவீரர்களுக்கு கொடையா படைக்கின்றோம் ஒரு பூவெடுத்துப் போடும் நிகழ்வையும் நடாத்தவிடாது புழுத்துப்போன இளங்கோவன் பானர் எல்லாம் கிழித்தெறிக்கின்றான்.அவன் வீட்டில் வீசிய குண்டு அவன் தலையில் போட வேண்டியது. இந்தப் பொறுக்கிகளையெல்லாம் நாட்டில் நடமாடவிட்டு குடை பிடிக்கும் தமிழனுக்கு எதிரியின் கையால் ஒரு குவளை நீர் கூட குடியாது உயிர் விட்ட சேரலாதன் இரும்பொறையின் கதையை நினைவு படுத்த வேண்டும்.

தமிழனின் சரித்திரத்தை மறந்து விட்ட இந்த தமிழ் நாட்டுச் சனத்தை என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?

Friday, November 27, 2009

தமிழ் மணமா? தமிழ் பிணமா?

ஏன்யா என்ன தான் நடக்கின்றது இங்கே?


வாசகர் பரிந்துரை
மதம் பற்றி பெரியார்
4
தமிழ் ஓவியா

இனவெறி, பார்ப்பனீயம்
5
Dr.Rudhran

நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8
பிரியமுடன்...வசந்த்

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12
SUREஷ் (பழனியிலிருந்து)

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5
இரும்புத்திரை அரவிந்த்

யோகி?? - விமர்சனம்
4
ஜெட்லி

தமிழினத் தலைவா...
9
புலவன் புலிகேசி

கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6
தேவன் மாயம்

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7
வினவு

ஒலியும் ஒளியும்
9
பா.ராஜாராம்

மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள்
4
மதம் பற்றி பெரியார்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்
மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
யோகி - திரைப்பட விமர்சனம்
3/3 | உண்மைத் தமிழன்(15270788164745573644) | சினிமா விமர்சனம் | சினிமா
27-11-2009 என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
இனவெறி, பார்ப்பனீயம்
5/6 | Dr.Rudhran | பார்ப்பனீயம்
இதை எழுத நேர்ந்ததே என்ற வருத்தமும் , அவசரமாக இதை எழுதுகிறேனே என்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
சந்தன முல்லை என்கிற பப்புவின் ஆச்சி பற்றி...
3/3 | ஜெயந்தி
இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. " சித்திரக்கூடம் " சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
வி.பி. சிங் நினைவு நாள் சிந்தனைகள்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை- பார்ப்பனியம்
வி.பி. சிங் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8/8 | பிரியமுடன்...வசந்த் | சமூகம் | சினிமா
முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது.. ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
12
தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12/12 | SUREஷ் (பழனியிலிருந்து) | தொழில்நுட்பம் | தமிழ்மணம் | அனுபவம்
தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5/5 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அனுபவம்
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய் இந்த காமெடி பாக்கும் போதெல்லாம் என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.ஆனா இப்போ இந்த காமெடி வந்தாலே உடனே சேனல் மாற்றி விடுவேன்.அப்படி என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
யோகி?? - விமர்சனம்
4/4 | ஜெட்லி | சினிமா விமர்சனம் | யோகி
யோகி ?? இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்அமீரின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
தமிழினத் தலைவா...
9/9 | புலவன் புலிகேசி | தமிழினத் தலைவா
தமிழினத் தலைவா உனக்கு நேற்று பிறந்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6/6 | தேவன் மாயம்
ஒரு சிறு அமைதி, ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7/7 | வினவு | இன்று | கவிதை | முதலாளித்துவம்
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
ஒரு பேச்சுலரின் "புலம்பல்கள்..."
3/3 | நாஞ்சில் பிரதாப் | புலம்பல்கள் | நகைச்சுவை | அனுபவம்
தங்கமணிகளும், ரங்கமணிகளும் ஆளுக்காளு மாத்தி, மாத்தி புலம்பிட்டு இருக்காய்ங்க... பேச்சுலர்கள் மட்டும் புலம்ப கூடாது என்ன? இதோ ஒரு பேச்சலரின் புலம்பல்கள்: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
ஒலியும் ஒளியும்
9/9 | பா.ராஜாராம் | கவிதைகள்
(picture by CC licence, thanks Mark ) ஒன்று. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
என்னமோ நடக்குது
3/3 | சின்ன அம்மிணி | சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டி
சர்வேசன் சிறுகதைப்போட்டி ஒண்ணு நடத்த , நம்மளும் சும்மா இருக்காம திருப்பம் என்ற பெயரில் ஒரு கதை எழுதி அது முதல் இருபதுக்குள்ள இடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
தோழா நீ எங்கே...
6/7 | ஹேமா | கவிதை ஈழம்
தோழா... எமக்கான தேவைகளை சமாதானத்திற்கான வார்த்தைகளை எமக்காகப் பேசி பார்வைகளால் விதை தூவி பயிரிட்டவன் நீ எங்கே நீ ! ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!
5/5 | மாதவராஜ் | சமச்சீர் கல்வி | நிகழ்வுகள் | சமூகம்
கார்ட்டூன் பக்கம் நன்றி : தி ஹிந்து நாளிதழ், 26.11.2009 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
எ ஃபார்...
9/9 | சந்தனமுல்லை | உயிரெழுத்துத் தொடர் | நினைவுகள் | மொக்கை
..... எடுத்துக்காட்டு !! இந்த ' எ . கா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
சினிமா வியாபாரம்-13
7/8 | Cable Sankar | தொடர் | Cinema Business | சினிமா வியாபாரம்
லேப் லெட்டர் நாங்கள் புதியவர்கள் என்பதால் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் போலவே நாங்கள் தயங்கி, தயங்கி நிற்க, படத்தை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.
8/9 | ஹேமா | ஈழம்
இந்தியாவுக்கும் எதிரான சிங்களம். 2008 ம் ஆண்டில் தலைவரின் உரை. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
14
அழகே உன்னை ஆராதிக்கிறேன்...
14/15 | தண்டோரா ...... | அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர்
அழகு என்பதற்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்...
3/3 | சரவணகுமரன் | மகேந்திரன் | இசை
மகேந்திரனின் விரல் உதிர்க்கும் இசையெழுத்துக்கள். --- சமீபத்தில் நண்பரின் திருமணத்துக்காக விழுப்புரம் சென்றிருந்தேன். முதல் நாளே சென்றதற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் காரணம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!
9/9 | கலகலப்ரியா | பொது | உலகம் | சிந்தனை
இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
15
தொழுது நிற்கிறோம்!
15/18 |
அகண்ட தீக்குளித்து அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது தெளிந்தது சீதையின் கற்பல்ல இராவணனின் சீலம்! கையறு நிலையிலும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
பிடிக்காத பத்தும் சில பதில்களும்........
6/6 | அது சரி | மொக்கை | கலாச்சாரம் | பதிவர் வட்டம்
// ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post " ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன?
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
நான் தேடிக்கொண்ட பரிகாரம்...
7/7 | பிரபாகர்
என்னோட சின்ன வயசில நடந்த விஷயம் இது. மூனாவது படிச்சிகிட்டிருந்தேன். ஊர்ல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா உடனே ரேடியோ கட்டிடுவாங்க. 'போனால் போகட்டும் போடா...', 'சட்டி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
"நானும் தமிழன் தானே\' காக்கை வன்னியன் கருணாநிதியின் ...
3/3 | இட்டாலி வடை
"முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
கதம்பம் - 26/11/09
4/4 | வடகரை வேலன் | கரிசல் இலக்கியம் | கரிசல் கதைகள் | மும்பை
தனிப்பதிவிட்டும், பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சலிலும், குருஞ்செய்தியிலும், கை பேசியில் அழைத்துமென வாழ்த்து மழையில் நனைத்த உள்ளங்களுக்கு நன்றி. ** சென்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
எழுச்சி நாள்
3/3 | இட்டாலி வடை
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை
மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
ஹீரோ!
8/9 | | கற்பனை | நகைச்சுவை
என் பேரு. அது எதுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
3/3 | குழலி / Kuzhali
இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்காகக் கொளுத்தப்பட்டது?
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம்
நவம்பர் 26 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் - Flugten (The Escape)
4/4 | அதி பிரதாபன் | அ.பி. | விமர்சனம் | திரை விமர்சனம்
கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
சில நேரங்களில்
6/6 | அகல்விளக்கு
சில நேரங்களில் கடற்கரை காணும்போது உடல் நிலைத்து இருந்தாலும் மனது லயித்து குதித்தோடுகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
பாசிஸ்ட் அரவிந்த் - நானும் புது பட்டம் வாங்கிட்டேன்
5/6 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அரசியல்
கே.எஸ் ரவிகுமார்,விஜய் இவங்க எல்லாம் கூட டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்க.எட்டு மாசமா நானும் பதிவு எழுதி உயிரை வாங்குறேன்.எனக்கு ஒரு பட்டமும் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் சுருண்டு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
அமீரகவாழ் அன்பர்களுக்கு RTA-வின் எச்சரிக்கை
4/4 | கிளியனூர் இஸ்மத் | எச்சரிக்கை
அமீரகவாழ் அன்பர்களுக்கு நவீனமுறையில் வழிப்பறிகளும் திருட்டுகளும் சமீபகாலமாக அமீரகத்தில் நடந்து வருகிறது. தியாகத் திருநாளை முன்னிட்டும் அமீர 38 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?
4/4 | அன்புடன் அருணா | பசங்க
"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க


குறிப்பு:அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை இன்னும் முன்னால் வரவே இல்லை ...இது ஆட்டாமட்டிக்கா? அல்லது றீசன்மட்டிக்கா?

Thursday, November 26, 2009

அந்த அழகான காதல் கதை

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் தவறென்றே உணருவதில்லை. இலவச ஆலோசனைகளை அள்ளிவிட்டுக்கொண்டிருப்பார்கள். அதில் ஒரு குரூர மகிழ்ச்சியும் அடைவார்கள்.

அப்படியொரு குரூர மகிழ்ச்சிதான் அந்த அழகிய காதலைப் பிய்த்துப் போட்டது. இரண்டு மனங்களை ரணகளப்படுத்தி விட்டது. இருவரை நடைப்பிண்மாக மாற்றி விட்டது.




'அழகான சிறு குருவிக் கூடாக கட்டியிருக்கும் இந்தக் காதலைக் குலைத்துப் போடாதீர்கள் கலைத்துக் போடாதீர்கள்.." என்று அவன் எழுதிப் போட்ட கடிதம் கன்ணீரில் கரைந்து போயிருக்கலாம். அல்லது கால்களில் தேய்ந்து போயிருக்கலாம்.

இன்று அந்த பென்ணின் தந்தை இல்லை. சமூகத்தின் எந்த நடைமுறைகளைக் கட்டிக்காக்கவென்று செயற்பட்டாரோ அவையெல்லாம் வெறும் சடங்காகவே சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த இருவரும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு திசையில் ஏதோவொரு நினைவில் காலங்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். கூடவே சாட்சியமாக இந்த டாக்டரும்.

அந்த அழகான காதல் கதையை நினைக்கையில் கூடவே கண்ணீரும் வந்து கல்ங்கிக்கழிகின்றது. காதலின் இனிமையைச் சொல்வதா? நிறைவேறாது போன துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவா? வலி சுளீரென்று உயிரைக் குலைக்கின்றது. இரண்டு வாழ்க்கை அழிந்து போன,அழிக்கப்பட்ட சோகம் துரத்துகின்றது. இருந்ததோ ஒரு வாழ்க்கை. அதன் பின் விட்ட தவறுகளைத் திருத்த யாரால்தான் முடியும்.

தனக்கு வலுக்கட்டாயமான நிச்சயயதார்த்தம் முடிந்து விட்டது என்று அந்தப் பெண் எழுதிய கடிதம் இன்றும் அவன் இதயத்தில் முட்களாக நெருடிக்கொண்டிருக்கின்றது. "ஐயோ நான் இழக்கக் கூடாத செல்வம் நீ.." என்று அவன் இதயம் இன்றும் கதறிக் கரைந்து கொண்டிருக்கின்றது.

அந்தக் காதலைக் கசக்கிப் போட்ட நீங்களும் உங்கள் கொள்கைகளும்..... நல்லாருங்கடே

(கண்களின் கண்ணீர் தொலைந்து விட்டால் இன்னும் தொடரும்)

Wednesday, November 25, 2009

தமிழ் மணம் வெட்கப்பட வேண்டும்


ஒரு அழகான காதல் கதையை கலைத்துப் போட்ட ஒரு சாதி வெறி பிடித்த டாக்டரை நட்சத்திரமாக்கியதற்காக தமிழ் மணம் நிச்சயம் வெட்கப்பட்டே தீர வேண்டும். அப்போதெல்லாம் அவர் பருத்தித் துறையில் பிறைவேற் கிளினிக் வைத்திருந்த பிரபல குள்ள டாக்டர்.

நாங்களும் தான் அங்கு எத்தனையோ முறை போய் காசைக் கொட்டியிருந்தோம். ஆனாலும் பணம் கறக்க விரிந்திருந்த பேராசை பிடித்த மனம் மக்களை மக்களாக மதிக்க விரிந்திருக்கவில்லை.

அந்த அனுபவத்தைத் தான் இங்கு விரிவாக உங்கள் முன் விரித்திருக்கின்றேன். அது ஒரு அழகான காதல் கதையாக இருந்த வேளை ஆபத்தானதாகவும் இருந்தது. காதல் வானில் சிறகடித்த சிட்டுகளுக்கு சமூகத்தின் கசடுகளைப் பற்றி சிந்திக்க ஏது நேரம். மணலைக் கயிறாகத் திரிக்கவும் வானத்தை வில்லாக வளைக்கவும் கற்பனை செறிந்த கனவுலகம் விரிந்து கிடந்ததே.

கற்பனைகளில் கூடு கட்டி என்னவொரு சுகமான வாழ்வில் அவர்கள் திளைத்திருந்தார்கள். ஆவாரம் பூவின் பெயரில் தொடங்கும் ஊரில் சைவர் சாதியில் பிறந்த அந்தப் பெண்ணை டாக்டரின் அயலூரவனான அந்தப் பையன் காதலித்ததும் கற்பனையில் மிதந்ததும் என்ன உலக மகா பாதகமா?

பெண்ணின் காதல் அறிந்த தந்தையார் தேடிப்போனதும் விபரம் கேட்டதும் இந்த டாக்டரைத்தான். அவர் சொன்னது "இந்த ஊரில் அந்தப் பெயரில் யாரும் இல்லை,சுத்தியிருக்கும் பள்ளோ நளமோ கரையானோ... எதற்கும் பிள்ளையைக் கவனமாகப் பாத்துக்கொள்ளுங்கோ.."

பெண்ணின் தந்தை "நல்ல மாட்டுக்கு ஒரு சூடும் நற்பார்த்தைக்கு ஒரு சொல்லும்" என்று எழுதி அந்தக் குருவிகளின் கூட்டைச் சிதைத்துப் போட்டதும் அந்தப் பெருமையைச் சூடிக்கொண்டதும் இந்த டாக்டரே.

மனிதரை மதிக்காதவன் டாக்டராய் இருந்தால் என்ன? தேவனாய் இருந்தால் என்ன?


குறிப்பு: இந்த டாக்டரைப் பற்றி இன்னும் நிறையவே கதைகள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் எழுதவும்.

Thursday, April 02, 2009

மாடம் கிளாரிக்கு ஒரு பகிரங்க கடிதம்


மாடம் கிளாரி!

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி மேரி ஜோய் கில்ரோய் கடந்த மார்ச் 9ஆம் திகதி, உங்களிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த தாங்கள், "
இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக்" குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் நல்லெண்ணத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு என்று மொட்டையாகச் சொன்னால் எப்படி ? தனியாகப் பிரிந்து செல்வதா? சமஷ்டி தீர்வா? அல்லது வெறும் மாகான சபைகளா? என்பதை வகை பிரித்துக்கூறக்கூடாதா?

ஏனெனில் தீர்வுகள் குறித்து நாம் பலமுறை திம்பு முதற்கொண்டு தாய்லாந்து டோக்கியோ ஈறாகப் பலமுறை பேசிவிட்டோம். பேசியதில் கண்டது எதுவுமேயில்லை. பேச்சு பேச்சைத்தொடர்ந்து யுத்தம். யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்கும் வேதனை. இதைத்தான் நாங்கள் இதுவரை கண்டு வந்துள்ளோம்.
இழப்புகள் எப்போதும் எங்களுக்குத்தான் .அந்த வேதனையில் தான் உங்களிடம் கேட்கின்றோம். உறுதியாக ஒன்றைக்கூறுங்கள். எங்களால் உடன்படமுடியுமா? இல்லையா?என்பதை நாங்கள் கூறுகின்றோம். திக்கில்லாத பேச்சு என்னும் காட்டில் அலைந்து விட்டு தீர்வில்லாது தொடங்கும் இன்னுமொரு யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்க எம்மிடம் அவ்வளவு உயிர்கள் இல்லை.

எத்தனை முறைதான் ஏமாறுவது?

"இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும், வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக " நீங்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் நகைச்சுவையுணர்வைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கில்லை என்றே எண்ணுகின்றேன். இன்று போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது வன்னியில். போரை நடத்திக்கொண்டிருப்பது சிறிலங்கா இராணுவம். நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தீர்வை வையுங்கள் என்று சிறிலங்கா அரசை வலியுறுத்தியிருந்தால் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் நல்லெண்ணத்தைபுரிந்திருப்பார்கள்.

இதை விட்டு விட்டு தன்னைக்காத்துக்கொள்ளப்போராடும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அது என்ன? தக்குதலை முன்னெடுப்பவனை விட்டு விட்டு தாக்குதலால் பாதிக்கப்படுபவனை மட்டும் நிறுத்தச் சொல்லி கோசம் போடுகின்றீர்கள். தற்காத்துக் கொள்வது -நம் பெண்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்வது-உங்கள் எண்ணப்படி வன்முறை செய்வதா?

நாங்கள் அத்தனை தூரம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்பட்டது எப்படி? இரட்டைக்கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று ஆப்கானிஸ்தான் சென்று தாக்குதல் செய்து கொண்டிருப்பதுவும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் என்று ஈராக்கில் படை நடாத்தும் உதாரணமும் நீங்கள் உலகுக்கு வழங்கியதுதானே. ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் இடத்தை விட்டு சிங்கள ஊர்களுக்குச் சென்று சண்டையிடவில்லையே? அத்தனைதூரம் சகிப்புடன் இருக்கும் எங்கள் பொறுமையை நீங்கள் மெச்சக்கூடாதா?

"இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும்
" கூறியிருக்கின்றீர்கள். உங்கள் இத்தனை வேலைபளுக்கள் மத்தியிலும் இலங்கையின் பாலும் தமிழ் மக்களின் மீதும் நீங்கள் கொண்ட கரிசனையை நாங்கள் மெச்சுகின்றோம்.

தீர்வு தான் கொடுக்கப்போகிறீர்களே? தாக்குதலை நிறுத்தச் சொல்லிச் சொல்லக்கூடாதா? அது என்ன பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது என்பது? அவர்கள் எப்போதுதான் அப்படித் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார்கள்? நீங்கள் இப்படிக்கூறுவது சிங்கள அரசை நீங்கள் குற்றம் சொல்வதாக ஆகாதா? அப்படி நடாந்திருந்தால் சர்வதேச மனித நீதியின் மாண்புகள் நீங்கள் சும்மாயிருந்திருப்பீர்களா? சில நூறு மனிதர்கள் இரட்டைக்கோபுரத்துடன் இறந்ததற்காக படை நடாத்துபவர்கள் நீங்கள். பல ஆயிரம் மக்கள் இறந்தால் சும்மா இருப்பீர்களா?

"அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. "

அடடா.. இராணுவ உடையுடன் வன்னிக்காடுகளில் அலையும் வெள்ளை தோல் மனிதர்கள் இவர்கள் தானா? சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்பவர்கள் என்று நாங்கள் தவறாக எடை போட்டு விட்டோமே? இவர்கள் ஒன்றும் அரிசி மூட்டையையும் மாமூட்டையையும் காவி வந்ததை நாங்கள் பார்க்கவில்லையே. குண்டுகளைப் போட்டுத் துரத்துவதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனை பிஞ்சுக்குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் ஆண்களும் யுத்தக் காயத்தினாலும் உயிரைக் கொல்லும் பசியினாலும் இறந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இழுத்துப்போட்டு மண்மூடவே பலமுமின்றி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டு துயராற்ற நேரமுமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோமே. எப்படி உங்களால் இப்படியெல்லாம் ..? துக்கமாக இருக்கின்றது.

"அத்துடன் இடம்பெயர்ந்தமக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்
" இப்படியும் கூறியிருக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் வெளியிட்ட கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ்விடம் பெயர்ந்த மக்களின் அவலம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் ".

இது நாங்கள் கூறவில்லை கிளாரி அம்மையாரே! அன்னிய நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கூறியது. சிங்கள அரசின் இடைத்தங்கல் முகாம்கள் பற்றி யும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு கொலைக்களத்திற்கா எங்களைப்போகச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். ஈழத்தமிழ் மக்கள் உங்களிடம்கேட்பது பிச்சையல்ல , உயிர் வாழ்தலுக்கான உத்தரவாதம்.

அதே நேரம் உங்கள் பேச்சை சிறிலங்கா அரசு ஒன்றும் கேட்பது போலத் தோன்றவில்லையே. அது இப்படியொரு அறிக்கை விட்டிருக்கின்றதே.

"விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. ஒரு மணி நேரத்துக்கேனும் தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது" என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இப்போது நாங்கள் என்ன செய்வது அல்லது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று இன்னுமொரு அறிக்கை விடுங்கள். நீங்கள் அறிக்கை விடுவதும் அதை நாங்கள் வாசிப்பதுவும் ,இப்படித்தானே காலம் போகின்றது.

இதில் என்ன துயரம் என்றால் உங்களுக்கு அது 4வருட விளையாட்டு. எங்களுக்கு ஆயுள் முழுவதற்குமான சீரழிவு..

வன்னியில் துயரப்படும் ஜீவன்.

மாடம் கிளாரியின் கடிதம்:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12512